விபத்தில் சிறுவன் பலி – மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்…!!

Read Time:1 Minute, 6 Second

1506544900Untitled-1கடுகஸ்தோட்டை – தித்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி சுவரொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த நான்கு சிறுவர்கள் மற்றும் சாரதியும் காயமடைந்த நிலையில் கடுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், வடகொட பகுதியைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் மற்றும் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு…!!
Next post புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?: வெளிவராத உண்மைகள்..: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’…!!