பண்ருட்டி அருகே கள்ளக்காதலிக்கு சரமாரி வெட்டு: காதலன் தீக்குளித்து தற்கொலை…!!

Read Time:4 Minute, 5 Second

d4b90b49-ba76-4129-bb98-f2cef74537a6_S_secvpfபண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்களுக்கு 1 மகனும், மகளும் உள்ளனர்.

தட்சிணாமூர்த்தி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து சுமதி தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சுமதிக்கும், அதியனூர் கிராமத்தை சேர்ந்த தனசேகரன் (30), தொழிலாளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த 18 வருடங்களாக கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுமதியின் மகன் முத்தமிழுக்கு திருமணம் நடந்தது. அதன்பின்னர் அவர் மனைவியுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். தனசேகரன், குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது முத்தமிழுக்கு பிடிக்கவில்லை. அதனால் தனசேகரனை வீட்டுக்கு வரக்கூடாது என்று சுமதியிடம் மகன் முத்தமிழ் கூறினார். இதையடுத்து தன சேகரனிடம் இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று சுமதி கூறினார்.

இதனால் மனமுடைந்த தனசேகரன் அங்கிருந்து சென்றுவிட்டார். கள்ளக்காதலியை விட்டு பிரிய மனம் இல்லாமல் தனசேகரன் தவித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தனசேகரன் கள்ளக்காதலி சுமதி வீட்டிற்கு கத்தி, அரிவாளுடன் வந்தார். வீட்டின் பின்கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டில் யாரும் இல்லை.

இதையடுத்து தனசேகரன் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றினார். மண்எண்ணை வாசனை வந்ததால் வீட்டிற்கு வெளியே இருந்த சுமதி வீட்டிற்குள் ஓடிவந்தார். அப்போது தனசேகரன் சுமதியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று கூறி அவர் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். பின்னர் அவரும் சுமதியை கட்டிப்பிடித்தார்.

தீக்காயத்தால் இருவரும் அலறினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். வீட்டிற்குள் சுமதியும், தனசேகரனும் கருகி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது தனசேகரன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். சுமதி தீக்காயத்தால் அலறிக் கொண்டு இருந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரஸெல்ஸ் தாக்குதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது: சலா அப்தெசலம்…!!
Next post வங்காளதேசம் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 13 பேர் பலி…!!