திருமங்கலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…!!
Read Time:1 Minute, 6 Second
திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியில் மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த ரெயிலில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஜாபர்தீன் என்பவரது மகன் வஜீகர்ரகுமான் (வயது 22) தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வந்துகொண்டிருந்தார். ரெயிலில் வந்த வஜீகர் படியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
ரெயில் திருமங்கலம் அருகில் உள்ள மறவன்குளம் பகுதியில் வந்தபோது தவறி விழுந்ததில் வஜீகர்ரகுமான் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து மதுரை ரெயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராணி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Average Rating