நண்பர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி : மூன்று மாணவர்கள் கைது..!!
தமிழகத்தின் செங்கல்பட்டு அருகே பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பாக மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பையை அடுத்த காவனூரை சேர்ந்த 14 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார் பாடசாலையில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பாடசாலைக்கு செல்லவில்லை. இதை பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த மாணவி சிங்கபெருமாள்கோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்து காவனூரை சேர்ந்த நண்பர் விமல்(வயது 19) என்பவருக்கு போன் செய்து அங்கு வரும்படி அழைத்தார்
விமல் தனது நண்பர்களான அழகேசன்(21) மற்றும் பிளஸ்1 மாணவருடன் சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
அவர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவியை திருக்கச்சூரில் உள்ள மோட்டார் அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு விமல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மற்ற இருவரும் துஷ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளனர்.
மாணவியின் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் விமல், அழகேசன் மற்றும் பிளஸ்1 மாணவரை மடக்கிப் பிடித்தனர்.
மாணவியை மீட்டு மறைமலைநகர் காவற்துறையில் ஒப்படைத்தனர். மறைமலைநகர் காவற்துறையினர் இது குறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவற்துறையில் புகார் செய்தனர்.
காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விமல், அழகேசன், மற்றும் பிளஸ் 1 மாணவரை கைது செய்தனர்.
Average Rating