நீரில் மூழ்கிய இருவர் மாயம்..!!
Read Time:1 Minute, 23 Second
தெதுருஓயவில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு வந்த ஒரு குழுவினர் பின்னர் சிலாபம் – தெதுருஓயாவுக்கு சென்றுள்ளனர்.
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், சிலாபம் – தெதுருஓயா ஆற்றுக்கு அருகில் சிலர் சாப்பிட்டு கொண்டிருந்ததுடன் சிலர் ஆற்றில் நீராடியுள்ளனர்.
இவர்களில் மெனிக்திவேல – திஸ்மட பகுதியைச் சேர்ந்த ஈ.ஜீ.வீரக்கோன் எனும் 53 வயதான நபரும், ரஞ்சித் பிரேமகுமார் எனப்படும் 39 வயதான நபரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இதுவரை சடலங்கள் கிடைக்கவில்லை எனவும் தேடுதல் நடைபெற்று வருவதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating