ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் கடும் சண்டை: 15 வீரர்கள் பலி…!!

Read Time:1 Minute, 35 Second

ba0fbe20-0dcd-40e6-a467-836f1debd00d_S_secvpfஆப்கானிஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையை மீட்பதற்காக தலிபான்களுடன் நடந்த சண்டையில் 15 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருஸ்கான் மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலையான தரின் கோட்-திராவுத் நெடுஞ்சாலையை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சாலையை மீட்டு மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடும் முயற்சியில் ராணுவம் இறங்கியது.

இதனால் தலிபான்களை சுற்றி வளைத்த ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. நேற்று நள்ளிரவில் நடந்த கடும் துப்பாக்கி சண்டைக்குப் பிறகு அந்தசாலையை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இந்த சண்டையில் பாதுகாப்பு படை தரப்பில் 15 வீரர்கள் பலியானதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் திராவுத் மாவட்ட காவல்துறை தலைவர் ஒருவர் தெரிவித்தார். தலிபான்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்..!!
Next post கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…!!