கணவர் பயணம் செய்யும் உல்லாசக் கப்பலை அடைவதற்காக 4 மணித்தியாலங்கள் கடலில் நீந்திய 65 வயதான பெண்..!!

Read Time:4 Minute, 7 Second

timthumb (1)உல்­லாசக் கப்­பலில் தனது கணவர் பயணம் செய்­வ­தாக எண்ணிய 65 வய­தான பெண்­ணொ­ருவர் அக்­ கப்­பலை அடை­வ­தற்­காக 4 மணித்­தி­யா­லங்கள் கடலில் நீந்தி களைத்த நிலையில் மீன­வர்­களால் காப்­பாற்­றப்­பட்ட சம்­பவம் போர்த்­து­க்கலில் இடம்­பெற்­றுள்­ளது.

பிரிட்­டனைச் சேர்ந்த உல்­லாசப் பய­ணி­யான சுசான் பிரவுண் எனும் பெண்ணே இவ்­வாறு கடலில் நீந்­தினார். இப்­ பெண்ணும் அவரின் கண­வரும் உல்­லாசக் கப்­ப­லொன்றில் பயணம் மேற்­கொண்­டனர். 32 நாட்கள் இப்­ பயணம் நீடிக்­க­வி­ருந்­தது.

எனினும் 28 ஆவது நாளான கடந்த சனிக்­கி­ழ­மை­யுடன் இவர்கள் பயணத்தை முடித்­துக்­கொண்டு விமானம் மூலம் பிரிட்­ட­னுக்குத் திரும்பிச் செல்­வ­தற்குத் தீர்­மா­னித்­தனர்.

அதை­ய­டுத்து போர்த்துக்­கலின் ஃபன்சால் துறை­முகத்தில் இவர்கள் இறங்­கினர். பின்னர் பிரிட்­டனின் பிரிஸ்டல் நக­ருக்குச் செல்­வ­தற்­காக பன்சால் நகர விமா­ன ­நி­லை­யத்­துக்கு இவர்கள் சென்­றனர்.

அவ் ­வி­மான நிலை­யத்தில் சுசான் பிர­வு­ணுக்கும் அவரின் கண­வ­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. அதை­ய­டுத்து தான் டெக்­ஸி­யொன்றை பிடித்து மீண்டும் துறை­மு­கத்­துக்குச் சென்று கப்பல் பய­ணத்தை தொட­ரப்­போ­வ­தாக சுசானின் கணவர் கூறி­விட்டு அங்­கி­ருந்து வெளி­யே­றினார்.

சனிக்­கி­ழமை மாலை, அந்த கடற்­க­ரை­யோர விமான நிலைய வளா­கத்தில் இருந்த சுசான் பிரவுண், மேற்­படி கப்பல், விமான நிலை­யத்­துக்கு சற்று தொலைவில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் சென்­று­கொண்­டி­ருப்­பதை கண்டார். அக்­ கப்­ப­லி­லுள்ள தனது கண­வ­ருடன் இணைந்து கொள்­வ­தற்­காக நீந்­தியே கப்­பலை அடை­வ­தற்குத் தீர்­மா­னித்தார்.

இரவு 8 மணி­ய­ளவில் தனது கைப்­பையை மிதவை போன்று பயன்­ப­டுத்­திக்­கொண்டு அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் அவர் நீந்த ஆரம்­பித்தார். சுமார் 4 மணித்­தி­யா­லங்கள் கடலில் நீந்­திய அவர் களைத்­துப்­போன நிலையில் உதவி கோரி அழ ஆரம்­பித்தார்.

ஞாயிறு அதி­காலை 12.20 மணி­ய­ளவில் அங்கு வந்த மீன்­பிடிப் பட­கொன்றி­லி­ருந்த மீன­வர்­களால் சுசான் பிரவுண் காப்­பாற்­றப்­பட்டார். கரை­யி­லி­ருந்து 500 மீற்றர் தொலைவில் நீந்­திக்­கொண்­டி­ருந்த நிலையில் அவர் மீட்­கப்­பட்டார்.

உடல்­வெப்ப நிலை மிகக் குறைந்த நிலையில் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. டைட்­டானிக் கப்­ப­லி­லி­ருந்து உயிர்­ தப்­பிய பெண் போல் அவர் காணப்­பட்டார் என மீனவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.
பின்­னர் அவர் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, சுசான் பிரவுணிடம் அவரின் கணவர் கூறியதைப் போன்று அவர் அக் கப்பலுக்குத் திரும்பிச் செல்லவில்லை. அவர் விமானம் மூலம் பிரிட்டனுக்குச் சென்றார் என்பது பின்னர் தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு..!!
Next post பாரிமுனையில் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது…!!