முச்சக்கரவண்டி விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 16 Second
அம்பாறை பாணமை உகந்தைமலை வீதியில் பொலிஸ் நிலைத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார் என பாணமை பொலிசார் தெரிவித்தனர்.
பாணமையைச் சேர்ந்த 30 வயதுடைய சுனில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான இன்று காலை 7.30 மணியளவில் பாணமை நகரில் இருந்து வேகமாக உகந்தமலை வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமால் வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பாணமை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பாணமை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating