வசந்த காலத்தை கவர்ந்த அழகிகளின் தொப்பிகள்…!!
Read Time:1 Minute, 5 Second
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு கடந்த 1ஆம் திகதி முதல் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.
குறித்த களியாட்டங்களின் போது, 10ஆம், 16ஆம் திகதிகளில் குதிரை பந்தயதிடலில் குதிரை பந்தயத்துடன் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்வுகளில் குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு பெண்கள் அணிந்திருந்த தொப்பிகள் அனைவரையும் கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது.
இந்த தொப்பிகளில் சிறந்த தொப்பிக்கான விருதும் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கு வரும் குறிப்பாக குதிரை பந்தயம் நடாத்துனர்கள், பொறுப்பானவர்கள், கழகத்தினை சார்ந்த பெண்கள் இவ்வாறு தொப்பிகளும், விதவிதமான ஆடைகளையும் அணிந்திருந்தனர்.
Average Rating