ஒரே நேரத்தில் மூவரை காதலித்த இளைஞருக்கு யுவதி கொடுத்த விசித்திர தண்டனை…!!
இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 யுவதிகளை காதலிப்பது அம்பலமான பின்னர் அந்த இளைஞரின் காரில் ஏமாற்றுக்காரன், பொய்யன் என மேற்படி யுவதிகளில் ஒருவர் எழுதிய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி இளைஞர் 3 யுவதிகளுடனும் தனித்தனியாக காதலர் தினத்தை கொண்டாடினார்.
மூவரையும் தனித்தனி வாரங்களில் சுற்றுலா அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்தார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்.
எம்மில் ஒருவருக்கும் மேலும் இருவரை அந்நபர் காதலிப்பது தெரிந்திருக்கவில்லை. எங்கள் மூவரையும் அவர் தனது சகோதரனின் திருமண வைபவத்துக்கும் அழைத்திருந்தார் என மேற்படி யுவதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேஸ்புக் மூலம் இந்த இளைஞரின் ஏமாற்று நடவடிக்கையை மேற்படி யுவதிகள் தெரிந்துகொண்டனர். இது தொடர்பாக இவர்கள் மூவரும் கலந்துரையாடினர்.
அதையடுத்தே, மேற்படி யுவதிகளில் ஒருவர் அந்த இளைஞரின் காரில் ஏமாற்றுக்காரன், பொய்யன் என கீறி வைத்தாராம்.
Average Rating