பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி நபர் பலி..!!

Read Time:1 Minute, 31 Second

sholat-jenazahதிருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் பன்றிக்கு வைக்கும் பட்டாஸ் வெடித்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த அருணகுமார (வயது 35) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் அவருடைய நண்பரும் கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்காக வந்த யானையின் தாக்குதலுக்கிழக்காகி அவருடைய நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

தன்னுடைய நண்பனுடைய இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத இவர், கடந்த மூன்று நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்ததாகவும் அதன் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா அல்லது கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளாரா என்பது தொடர்புடைய விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நேரத்தில் மூவரை காதலித்த இளைஞருக்கு யுவதி கொடுத்த விசித்திர தண்டனை…!!
Next post சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை..!!