ஸ்ரீகாளகஸ்தியில் சூட்கேசில் சிறுவன் பிணம்: சொர்ணமுகி நதியில் வீச்சு..!!

Read Time:1 Minute, 33 Second

timthumbசித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி கோவில் அருகே சொர்ணமுகி நதி ஓடுகிறது. இந்த நதியில் பெரிய சூட்கேஸ் பை ஒன்று கிடந்தது. இதை பார்த்த பக்தர்கள், வெடிகுண்டு இருக்குமோ? என்று அஞ்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்து சூட்கேஸ் பையை திறந்து பார்த்தனர். அதில், 7 வயது சிறுவன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் கழுத்தில் நைலான் கயிறு சுற்றப்பட்டு இருந்தது.

அவனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை பையில் திணித்து நதியில் வீசி உள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவில்லை.

அவனது உடல் போர்வையால் சுற்றப்பட்டு இருந்தது. அந்த போர்வை விடுதியில் தரப்படுபவை போன்று இருந்தது. இதனால் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தானா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

ஸ்ரீகாளகஸ்தியில் நிறைய லாட்ஜிகள் உள்ளது. அதில் ஏதாவது ஒன்றில் தங்கி இருந்தானா என்றும் விசாரிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிறையில் தங்கவைத்த அதிகாரிகள்…!!
Next post வங்காளதேசத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 12 பயணிகள் பலி – 50 பேர் காயம்…!!