பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் பொலிசார்…!!
Read Time:1 Minute, 24 Second
சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், பொலிசாரே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
ஹைதராபாத்தில் சாலையோரமாக நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளனர். ஆனால் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வர கால தாமதமாகியுள்ளது.
இதனால் அந்த பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த நான்கு பெண் காவலர்கள், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் அந்த பெண்ணையும், குழந்தையையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating