மதுபோதையில் தாக்கிய வாலிபர்: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நபர்…!!
ஜேர்மனியில் உள்ள மது விடுதி ஒன்றில்அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவரை வாலிபர் தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவேரியா மாகாணத்தில் உள்ள Theresienwiese என்ற நகரில் உள்ளமது விடுதியில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் 32 வயதான நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பியர் அருந்துவிட்டு அங்குள்ள வாலிபர் ஒருவரிடம் தகராறில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்கு வாதத்தில் தொடங்கிய இருவரின் சண்டை கைகலப்பில் முடிந்துள்ளது. இருவரும் கட்டுப்புரண்டு சண்டையிட்டுள்ளனர்.
அப்போது, 26 வயதான அந்த வாலிபர் 32 வயதான நபரின் முகத்தில் ஓங்கி குத்தியதில், அவர் பின்புறமாக சாய்ந்து விழுந்துள்ளார்.
சாய்ந்து விழுந்த அவரின் தலைப்பகுதி தரையில் பலமாக மோதியதில் ரத்தம் கொட்டியுள்ளது. நபரும் சுயநினைவை இழந்துள்ளார்.
உடனடியாக அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மது விடுதிக்கு சென்ற பொலிசார் முனிச் நகரை சேர்ந்த அந்த 26 வயதான நபரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்குறித்து விசாரணை செய்தபோது, அவர் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
எனினும், இருவருக்கும் இடையில் எப்படி தகராறு ஏற்பட்டது என்பது தெரியவராததால், வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating