கார் ஓட்டிய போது தூங்கிய ஓட்டுனர்: பரிதாபமாக பலியான குடும்ப உறுப்பினர்கள்…!!

Read Time:2 Minute, 44 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)பிரான்ஸ் நாட்டில் தந்தை ஒருவர் கார் ஓட்டிய போது தூங்கியதால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தந்தை உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு பிரான்ஸில் உள்ள Dijon என்ற நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.

இத்தாலி நாட்டிலிருந்து புறப்பட்ட ஒரு கார் பிரான்ஸில் உள்ள A39 நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 7 மணியளவில் பயணம் செய்துள்ளது.

காரை 31 வயதான தந்தை ஓட்டியுள்ளார். காரில் 12 மற்றும் 4 வயதான குழந்தைகளும், அவர்களது தாயாரும் அமர்ந்திருந்துள்ளனர்.

இந்நிலையில், அசுர வேகத்தில் பறந்துக் கொண்டு இருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த கார் சில அடிகள் தூரத்தில் விழுந்து அப்பளம் போல் நொருங்கியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் காருக்குள் அமர்ந்திருந்த இரண்டு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் வந்தபோது, இடற்பாடுகளுக்குள் சிக்கி தந்தை உயிருக்கு போராடியுள்ளார்.

ஆனால், அவரை காரை விட்டு வெளியேற்றிய அதே நிமிடம் அவரும் உயிரிழந்தார். எனினும், இந்த விபத்தில் தாயார் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் தந்தை கார் ஓட்டியபோது தூங்கியதால், இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், விபத்து குறித்து பிரான்ஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு….? பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…!!
Next post கனடாவில் இருந்து வந்தவர்களை ஏற்றிவந்த வாகனம் மோதி, சற்றுமுன் மாங்குளத்தில் குடும்பஸ்தர் பலி..!!