பயணிகளின் உடமைகளை எடுக்க சென்ற ஊழியர் பலியான பரிதாபம்…!!
கனடா நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடமைகளை எடுக்க சென்ற ஊழியர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொறொன்ரோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இயான் ஹென்றி பெர்வெஸ்(24) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
விமானங்களில் வரும் பயணிகளின் உடமைகள் அடங்கிய பெட்டிகளை ஒரு சிறிய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விமான நிலையத்திற்கு வருவது இவரது முக்கியப் பணியாகும்.
கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வந்த இயான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார்.
விமானம் ஒன்று வந்தவுடன் அதிலிருந்து இறக்கப்பட்ட உடமைகளை சிறிய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
சிறிது தூரம் பயணமான அந்த வாகனம் திடீரென கவிழ்ந்து உருண்டுள்ளது. வாகனத்தின் உள்ளே இருந்த இயான் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
விமான நிலையம் தரையில் விழந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், உடமைகளை ஏற்றிச் சென்ற அந்த வாகனம் எதனால் திடீரென கவிழ்ந்தது என்பது மர்மமாகவே உள்ளது.
வாகனம் சென்றபோது விமானம் ஏதாவது மோதியதா அல்லது சிறிய வாகனத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் ஏதாவது உள்ளனவா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating