தென் அமெரிக்க சேர்க்கஸ் நிறுவன ங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆபிரிக்காவுக்கு விமானங்களில் பறந்த 33 சிங்கங்கள்…!!
தென் அமெரிக்காவின் சேர்க்கஸ் நிறுவனங்களிலிருந்து மீட்கப்பட்ட 33 சிங்கங்கள் விமானங்கள் மூலம் ஆபிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் காட்டில் விடப்பட்டுள்ளன.
பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளின்போது இச்சிங்கங்கள் மீட்கப்பட்டிருந்தன. சேர்க்கஸ் சாகசங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த மிருகங்கள் மிக மோசமான நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் குறைந்தபட்சம் ஒரு சிங்கம் கண் ஒன்றை இழந்திருந்தது.
உலகில் அதிக எண்ணிக்கையான சிங்கங்கள் ஏக காலத்தில் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும். அமெரிக்காவைச் சேர்ந்த “எனிமல் டிஃபென்டர்ஸ் இன்டர்நெஷனல்” எனும் வன விலங்கு பாதுகாப்பு அமைப்பினால் இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான செலவை தானே பொறுப்பேற்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இச் சிங்கங்கள் ஆபிரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்காக்களில் விடப்படவுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating