மீண்டும் ஆராயப்படவுள்ள சுண்ணாகம் நிலத்தடி நீர்…!!
Read Time:1 Minute, 5 Second
மூன்று மாதத்திற்குள் சுண்ணாகம் நிலத்தடி நீரை மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்றம் வடமாகாண சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சுண்ணாகம் நீர் பிரச்சினை தொடர்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது, சுண்ணாகத்தின் நிலத்தடி நீரில் இன்னும் எண்ணெய்க் கசிவு காணப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து, அறிக்கையை மூன்று மாதங்களில் முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Average Rating