வாக்குவாதம் கொலையில் முடிந்தது..!!
Read Time:1 Minute, 1 Second
புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பணப் பிரச்சினையால் ஏற்பட்ட வாக்கு வாதமே இந்தக் கொலை இடம்பெறுவதற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி, கரிகட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரும் தாக்குதலில் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவரின் நிலமை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating