காத்தான்குடியில் மாடி வீடொன்று தீயில் எரிந்தது…!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- 4ஆம் குறிச்சி உமர்தீன் வீதியிலுள்ள மூடப்பட்டிருந்த மாடி வீடொன்று இன்று (07) சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தீயினால் குறித்த வீட்டின் உட்பகுதி எரிந்துள்ளதுடன், வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த வீட்டில் ஏற்பட்ட திடீர் தீயை அயலவர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்தோடு குறித்த வீட்டின் மின்சார கசிவு ஏனைய வீடுகளுக்கு பரவாமல் பாதுகாக்க இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மின்சார ஒழுக்கு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இத் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating