வால்பாறையில் மண்சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!!

Read Time:1 Minute, 57 Second

timthumbகோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இன்று மதியம் 1.30 மணியளவில் 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென வீட்டில் மண் தோண்டிக்கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்தது. இதில் 4 தொழிலாளர்கள் மீதும் மண் சரிந்தது. மேலும் மண்,மற்றும் கட்டிட இடிபாடுகளில் இடையே 4 பேரும் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் வால்பாறை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே அவர்கள் விரைந்து வந்து மண் சரிந்த கட்டிட இடிபாடுகளை அகற்றினர்.

இதில் பாலசுப்பிரமணியன் என்ற தொழிலாளி மண் சரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது. மற்ற 3 தொழிலாளர்களும் படுகாயத்துடன் உயிருடன் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். காயம் அடைந்த அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் மண் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாணியம்பாடி அருகே தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை…!!
Next post சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 22 தொழிலாளர்களின் பிரேதங்கள் மீட்பு..!!