முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் கொள்ளை…!!
Read Time:51 Second
பாணதுறை பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பாணதுறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொள்ளையிடப்பட்டவை, முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவிக்கு சொந்தமான நகைகள் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லை என்பதோடு, சந்தேகநபரைத் தேடி பாணதுறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating