வாழப்பாடி அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…!!

Read Time:4 Minute, 56 Second

201605281052369893_four-killed-in-road-accident_SECVPFசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்லேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது வீட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரகலூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் ஆனந்தபாபு (வயது 27) என்பவர் வந்திருந்தார். இவர் தங்கமணிக்கு மாமன் முறையாகும்.

மாமா தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து விட்டு, வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு சொந்த வேலை காரணமாக வாழப்பாடிக்கு செல்வதற்காக இன்று காலையில் புறப்பட்டார். அப்போது, அவரை தங்கமணியின் மகன் சாருஹாசன் (22) என்பவர் மொபட்டில் அழைத்து சென்றார்.

இருவரும் காலை சுமார் 9 மணியளவில் மொபட்டில் வாழப்பாடியை அடுத்த பெரியாகிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, எதிரே பாண்டிச்சேரியில் இருந்து சேலத்தை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது.

அப்போது வேறு ஒரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, சொகுசு காரும், மொபட்டும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் நிற்காமல் சென்று சாலையின் ஓரத்தில் உள்ள சுமார் 8 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் மொபட்டில் சென்ற வாலிபர் சாருஹாசன், அவரது உறவினர் ஆனந்த பாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

காரை ஓட்டி வந்த டிரைவர் திருநாராயணன்(40) மற்றும் அவரது நண்பர் சுரேஷ்(38) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். காரில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்தை கண்டதும், சாலையில் சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து , காயம் அடைந்த டிரைவர் திருநாராயணன், சுரேஷ், விஜயகுமார், சிவராமன்(37), அருள்(37), சுரேஷ் மகன் விஷ்வா(12) ஆகிய 4 பேரையும் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் டிரைவர் திருநாராயணன் மற்றும் நணபர் சுரேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

காயம் அடைந்த மற்ற 4 பேருக்கும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியான சாருஹாசன் மற்றும் அவரது உறவினர் ஆனந்தபாபு மற்றும் காரில் வந்த டிரைவர் திருநாராயணன், சுரேஷ் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கோர விபத்தை கேள்விப்பட்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து உடல்களை பார்த்து கதறி அழுதனர். ஆஸ்பத்திரி முழுவதும் ஒரே அழுகுரல் சத்தமாக ஒலித்தது.

பலியான சுரேஷ் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். டிரைவர் திருநாராயணன் பாண்டிச்சேரி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்.

படுகாயம் அடைந்த விஜயகுமார், அருள் ஆகிய இருவரும் பாண்டிச்சேரி மடிகரை ஊரை சேர்ந்தவர்கள். சிவராமன் பாண்டிச்சேரி கரையான் புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பலியான ஆனந்தபாபு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த சம்பவம் கல்லேறிப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி அடித்துக் கொலை
Next post காலையில் மனைவி, மாலையில் கணவர்: மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!