சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு…!!
Read Time:48 Second
சந்தவாசல் அருகே உள்ள வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் ரவீன் (வயது 23). இவரது மாமாவுக்கு சொந்தமான ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிளை ரவீன் ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். யாரோ அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating