டெல்லியில் மனைவியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட குடிமகன்..!!
டெல்லியில் வாலிபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கியும் உள்ளார். டெல்லியை சேர்ந்தவர் பிரதீப் சர்மா(25). அவர் தனது மனைவி மோனிகாவுடன் நிஹால் விஹார் பகுதியில் வசித்து வந்தார். பண விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரதீபுக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்துள்ளது. இந்நிலையில் வாடகை கொடுக்க தாமதமானதால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து கணவன், மனைவி இடையே கடந்த 30ம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த பிரதீப் ஒரு செங்கல்லை எடுத்து தனது மனைவியின் முகத்தில் அடித்துள்ளார்.
மேலும் மோனிகாவின் தலையை பிடித்து சுவரில் மீண்டும் மீண்டும் மோதியுள்ளார். இதில் மோனிகா சம்பவ இடத்திலேயே பலியானார். மோனிகாவின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்துவிட்டு சடலத்துடன் உறவு கொண்டுள்ளார் பிரதீப்.
மேலும் சடலத்தின் அருகிலேயே படுத்து தூங்கியும் உள்ளார். காலையில் எழுந்த பிறகு தான் குடிபோதையில் மோனிகாவை கொலை செய்ததை உணர்ந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீபை பல இடங்களில் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
Average Rating