ஸ்கேன் சென்டரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டர் கைது…!!
Read Time:1 Minute, 12 Second
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டாக்டர் தயானந்தன் என்பவர் ஸ்கேன் சென்டர் வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு பரிசோதனைக்காக வந்த பெண்ணிடம் டாக்டர் தயானந்தன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் தயானந்தனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பொதுவாக ஸ்கேன் சென்டர்களில் ஆண் டாக்டர்களே அதிகம் இருப்பதால் அத்துமீறல்கள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பெண்களை ஆண் டாக்டர்கள் ஸ்கேன் செய்வதில் பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. எனவே, பெண்களுக்கு ஸ்கேன் செய்யும் பணியில் பெண் டாக்டர்களையே பணியமர்த்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.
Average Rating