இலங்கையில் அறிமுகமாகும் எல்.ஆர்.டி ரயில் சேவை ..!!
Read Time:1 Minute, 18 Second
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொழும்பில் எல்.ஆர்.டி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில், இத்திட்டம் மேற்க்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேம்பால அதிவேக வீதிகளை நிர்மாணிக்க ஜப்பான் இலங்கைக்கு நிதியுதவியை வழங்க உள்ளது.
கொழும்பில் இருந்து இராஜகிரிய பிரதேசத்திற்கு செல்லும் வகையில் ஒரு வீதியும், பேலியகொடை பிரதேசத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் வகையில் கோட்டை வரை மற்றுமொரு வீதி நிர்மாணிக்கப்படும். இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கொழும்பை சேர்ந்தவர்கள் உச்ச பயனை அடைய முடியும்
Average Rating