வாய்க்காலில் இருந்து இளைஞன் மற்றும் யுவதியின் சடலம் மீட்பு..!!
Read Time:1 Minute, 17 Second
இரத்தினபுரி மாவட்டம் குருவிட்ட பிரதேசத்தில் உள்ள எக்னெலிகொட, துன்ஹெல பகுதி வாய்க்கால் ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வாய்க்காலில் சடலங்கள் மிதப்பது கண்ட பொதுமக்கள் அது குறித்து பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு அறிவித்திருந்தனர்.
குறித்த சடலங்களில் ஒன்று குருவிட்ட, பாத்தகம, களுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரின் சடலம் என்றும் மற்றையது குருவிட்ட, கந்தன் கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியொருவரின் சடலம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வருகை தந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் குறித்த பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating