கருவில் இருக்கும் குழந்தை பற்றிய பாலின சோதனை: 6 பேர் கைது…!!

Read Time:1 Minute, 21 Second

201606200207249771_six-held-in-delhi-for-Gender-Prediction-Tests_SECVPFடெல்லியில் மத்திய மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நோய் பரிசோதனை மையத்தில் (கிளினிக்) விதிமுறைகளை மீறி கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்-பெண் குழந்தைகளை கண்டறியும் பாலின சோதனை நடத்தப்படுவதாக பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஹரியானா மற்றும் டெல்லி பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினர் இணைந்து சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பரிசோதனை மையத்தை நடத்தி வந்த டாக்டர் முத்ரேஜா மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பரிசோதனை மையத்திற்கு சோதனைக்காக சென்ற 2 கர்ப்பிணி பெண்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வன்முறை: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலி…!!
Next post பறவையாக மாறி பறந்து சென்ற மனிதர்… மேஜிக்கில் நடந்த நம்பமுடியாத உண்மை…!! வீடியோ