கருவில் இருக்கும் குழந்தை பற்றிய பாலின சோதனை: 6 பேர் கைது…!!
Read Time:1 Minute, 21 Second
டெல்லியில் மத்திய மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நோய் பரிசோதனை மையத்தில் (கிளினிக்) விதிமுறைகளை மீறி கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்-பெண் குழந்தைகளை கண்டறியும் பாலின சோதனை நடத்தப்படுவதாக பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஹரியானா மற்றும் டெல்லி பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினர் இணைந்து சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பரிசோதனை மையத்தை நடத்தி வந்த டாக்டர் முத்ரேஜா மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பரிசோதனை மையத்திற்கு சோதனைக்காக சென்ற 2 கர்ப்பிணி பெண்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
Average Rating