தண்டையார்பேட்டையில் மளிகை கடையில் தீ விபத்து…!!
Read Time:51 Second
தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் பெரிய ஆண்டவர். நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பிடித்தது. தண்டையார்பேட்டை ராயபுரத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த போருட்கள் அனைத்தும் நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating