ராயபுரத்தில் பூங்காவில் வாலிபர் அடித்து கொலை…!!

Read Time:1 Minute, 43 Second

201606221500133253_Royapuram-death-in-young-men-in-the-park_SECVPFராயபுரம், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே மாடிப்பூங்கா உள்ளது. இங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது முகத்திலும், தலையிலும் கம்பியால் அடித்ததற்கான தடயங்கள் இருந்தன. உடல் கிடந்த இடம் அருகே சிறிது தூரத்தில் ரத்தக்கறையுடன் சட்டை கிடந்தது.

எனவே பெண் தகராறு அல்லது முன்விரோதத்தில் அவரை மர்ம கும்பல் வேறு எங்கேனும் இருந்து கடத்தி வந்து பூங்காவில் அடித்து கொன்று தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.

கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். இது தொடர்பாக ராயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

பூங்காவில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒழுங்கீனமான பயணிகளை சமாளிப்பதற்காக சீன விமானப் பணிப்பெண்களுக்கு இராணுவப் பயிற்சி…!!
Next post நாமக்கல்லில் வங்கி அதிகாரி மனைவி கொலையில் மாமனார் – மாமியார் கைது…!!