கிளிநொச்சியில் திடீர் தீ விபத்து…!!
Read Time:1 Minute, 14 Second
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதி அக்கராயன்குளம்; சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்ணடதை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ பற்றிக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ரூவான் தலைமையிலன குழு முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால், வர்த்தக நிலையத்தில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், பெருந்தொகைப் பணமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating