இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா?
Read Time:1 Minute, 17 Second
மலேரியா நோய் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா என உறுதிப்படுத்துவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்து, உலக சுகாதார அமைப்பினால் சான்றிதழ் வழங்குவதற்காகவே இவர்கள் இலங்கை வரவுள்ளதாக, இலங்கை மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டீ.பி.ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் எந்தவொரு மலேரியா நோயாளியும் இனங்காணப்படவில்லை என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தால், மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கையை பிரகடனப்படுத்தப்படும் என, எச்.டீ.பி.ஹேரத் மேலும் கூறியுள்ளார்.
Average Rating