புதுவையில் வீடு புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை…!!
புதுவை வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையம்பேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ஜான் (வயது 27).
இவர், பகலில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது. அரிவாள், கத்தியுடன் வந்த அவர்கள் திடீரென ஜான் வீட்டுக்குள் புகுந்தனர்.
அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஜானை சரமாரியாக வெட்டினார்கள். இதனால் ரத்தம் பீறிட ஜான் அலறினார். அந்த சத்தம் கேட்டு ஜானின் தாயார் ஓடி வந்தார். அவரை அந்த கும்பல் கீழே தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. உயிருக்கு போராடிய ஜான் சிறிது நேரத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஜானின் உடலை கண்டு அவரது தாயார் கதறி அழுதார். வாலிபர் கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலின்பேரில் வில்லியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஜான் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து ரவுடிகளுக்கு சப்ளை செய்து வந்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது தெரிய வந்தது.
எனவே இது தொடர்பான தகராறில் ஜான் கொல்லப்பட்டாரா? அல்லது முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating