சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை வைத்திருந்தவர் கைது…!!
கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராய போத்தல்களையும் வைத்திருந்த நபரை, எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜீ. தம்மிக்க, சட்டவிரோத வடிசாராய போத்தல் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு 3500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கந்தளாய் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளையும், 8 வடிசாராய போத்தல்களையும் வாகனத்தில் ஏற்றுவதற்கு தயாராக இருப்பதாக, கந்தளாய் சிறுகுற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த காட்டுப்பகுதியில் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட போது, சந்தேகநபரொருவரைக் கைதுசெய்த பொலிஸார், முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராயப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட, மெதசிறிகம பகுதியைச் சேர்ந்த 26 வயது நபரை, கந்தளாய் தலைமையக சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நேற்று (27) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதையடுத்தே, நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Average Rating