சீனாவிலுள்ள கண்ணாடிப் பாலத்தின் வலிமையை நிரூபிப்பதற்காக சம்மட்டிகளால் அடித்து, வாகனத்தையும் செலுத்திக் காண்பித்த அதிகாரிகள்…!!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் இரு மலைச்சிகரங்களை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் நடந்து செல்ல பலர் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் பாலத்தின் உறுதித் தன்மையை நிரூபிப்பதற்காக அக் கண்ணாடி மீது பாரிய சம்மட்டியால் அடித்து, அதன்பின் அக் கண்ணாடியினூடாக கார் ஒன்றை செலுத்திக் காட்டியுள்ளனர் அதிகாரிகள்.
ஸாங்ஜியாஜி தேசிய பூங்காவில் உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட இப் பாலம் தரையிலிருந்து 300 மீற்றர் (984 அடி) உயரத்தில் உள்ளது.
இவ்வளவு உயரத்தில் கண்ணாடி மீது நடந்து செல்வது என்பது பலருக்கு நினைத் துப் பார்க்கவே தலைசுற்ற வைக்க விடயம்.
430 மீற்றர் நீளமான இப் பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென கீழே பார்த்து அச்சமடைந்து அழுது புலம்பியவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் இப் பாலத்திலுள்ள கண்ணாடி சாதாரண கண்ணாடி போன்று உடைந்துவிடக் கூடியதல்ல என்பதை நிரூபிப்பதற்காக சோதனை நிகழ்வொ ன்றை நடத்த அதிகாரிகள் தீர்மானித்தனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இச் சோதனை நிகழ்வில் 20 தொண்டர்கள் பங்கு பற்றினர். இதன்போது, பாரிய சம்மட்டியினால் கண்ணாடி மீது அடிக்குமாறு தொண்டர்கள் கோரப்பட்டனர்.
இதனால் கண்ணாடியில் கீறல்கள் ஏற்பட்டபோதிலும் எவராலுமே கண்ணாடியை முற்றாக உடைக்க முடியவில்லை. அதன்பின் பாரமான வாகனமொன்றும் அக் கண்ணாடி மீது செலுத்தப்பட்டது.
அப்போதும் அக் கண்ணாடி உடையவில்லை. அதன்பின் அக் கண்ணாடி மீது தொண்டர்கள் நடந்து சென்றனர். இக் கண்ணாடி 5 சென்ரிமீற்றர் தடிப்பு கொண் டவை என இப் பாலத்தின் பிரதம பொறியியலாளரான மா லியாங் மேற்படி சோத னைக்கு முன்னர் கூறினார்.
Average Rating