கடற்கரையில் குளிக்கச் சென்ற சிறுவனின் நிலை…!!
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடலில் குளிக்கச் சென்ற சிறுவன், நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நீரில் மூழ்கிய சிறுவன், திருகோணமலை-மனையாவெளி பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய கணேஷ் பிரேம்குமார் எனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், விடுமுறை தினமான நேற்று (03) தனது பாடசாலையில் கல்வி கற்று வரும் சக நண்பர்களுடன் வீட்டுக்கு அருகிலுள்ள கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளான்.
அங்கு சென்று கடலுக்குள் பந்தை எறிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது பந்து ஆழமான பகுதிக்குள் விழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆழமான பகுதிக்குள் விழுந்த பந்தை எடுக்கச்சென்ற போதே சிறுவன் நீரில் மூழ்கியதாக ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுவன், நீரில் மூழ்கியதைக் கண்ட சிலர், அவரைக் காப்பாற்றி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating