உத்திரமேரூர் அருகே லாரி மோதி, கணவன்-மனைவி பலி..!!

Read Time:1 Minute, 37 Second

201607050244243976_Husband-and-wife-killed-in-truck-collision-near-uthiramerur_SECVPFகாஞ்சிபுரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 37). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஆனந்தி (35). இவர்களது மகன் லோகேஷ்(7). ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

உத்திரமேரூரை அடுத்த மணல்மேடு என்ற இடத்தில் சென்றபோது எதிரே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினிலாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சிக்கி செல்வம், ஆனந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த லோகேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய மினிலாரி மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.

அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு பிள்ளைகளின் தாயாரான சுகாதார உத்தியோகத்தர், டெங்கினால் மரணம்…!!
Next post வேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…!!