ஈபிள் கோபுரத்தை ஓர் இரவு மட்டும் வீடாக பயன்படுத்திய குடும்பம்…!!
324 மீற்றர் (1063) அடி உயரமான இக் கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் பாரிஸ் நகருக்குச் செல்கின்றனர்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு ஓர் இரவு முழுவதும் ஈபிள் கோபுரத்தில் தங்கியிருப்பதற்கான அதிஷ்டம் கிட்டியது.
மைக்கல் ஸ்டிவன்ஸன் என்பவரின் குடும்பத்துக்கே இந்த அதிஷ்டம் கிட்டியது. விடுமுறை கால வாடகை அறைகள் தொடர்பான இணையத்தளம் ஒன்று நடத்திய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இத் தம்பதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
ஈபிள் கோபுரத்தின் முதலாவது தளத்திலுள்ள ஆடம்பர அறைத் தொகுதியில் இக் குடும்பத்தினர் ஓர் இரவு தங்கியிருந்தனர்.
ஈபிள் கோபுரத்தில் தங்கியிருந்தமை மிக இனிமையான அனுபவமாக இருந்தது எனவும் மீண்டும் இவ்வாறு தங்குவதற்கு தாம் விரும்புவதாகவும் ஸ்டீவன்ஸன் தெரிவித்துள்ளார்.
Average Rating