முச்சக்கரவண்டி விபத்து! மூவர் படுகாயம்…!!
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று மாலை 4.20 மணியளவில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் கார்லபேக் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலந்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த இரு பெண்களும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்து ஏற்பட காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.