முதல் மனைவிக்கு தெரியாமல் பெண் போலீசை 2-வது திருமணம் செய்த தர்மபுரி போலீஸ் ஏட்டு…!!

Read Time:2 Minute, 22 Second

201607091626157848_Dharmapuri-police-head-constable-married-the-2nd-woman_SECVPFதர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மகள் பிரீத்தா (வயது 25). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.

இவருக்கும் அருகில் உள்ள கோட்டைபட்டியை சேர்ந்த ஜீவா மகன் சுப்புராஜ் (32) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஜீவா திருப்பூரில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்ததால் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு கார்த்திக்ராஜா (4) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது பிரித்தாவை துண்புறுத்திய அவர் கூடுதல் வரதட்சணை கேட்டும் கொடுமை படுத்தினார்.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு பிரித்தா தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் அவரை சமதானப்படுத்திய பெற்றோர் மீண்டும் கணவர் வீட்டில் கொண்டு விட்டனர்.

அப்போது போலீஸ் ஏட்டு சுப்புராஜ் திருப்பூரில் போலீசாக பணிபுரியும் ஜோஸ்பின் ஜீவமேரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டது பிரித்தாவுக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரித்தா தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அரூர் அனைத்து மகளிர் போலீசார், போலீஸ் ஏட்டு சுப்புராஜ், பெண் போலீஸ் ஜோஸ்பின் ஜீவமேரி உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரில் உயிருக்கு போராடிய முதலாளி… நடிப்பு என்று தெரியாமல் ஐந்தறிவு ஜீவன் பட்ட அவஸ்தை…!! வீடியோ
Next post ஒரு தந்தை செய்ற காரியமா இது?… பாவம் அந்தக் குழந்தை எவ்வளவு ஷாக்கா ஆயிடுச்சுனு பாருங்க…!! வீடியோ