வீட்டு கூரை விழுந்ததில் மாணவி காயம்…!!

Read Time:1 Minute, 38 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பகுதியில் இன்று வீசிய கடும் காற்றினால் புதிதாக கட்டப்பட்ட மாடி வீட்டின் மேல் சுவர் அருகில் இருந்த வீட்டு கூரை மேல் உடைந்து விழுந்ததன் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை ஹைராத் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாடி வீட்டின் இரண்டாவது மாடியின் சுவர் இன்று காலை வீசிய காற்றின் காரணமாக அருகில் உள்ள வீட்டின் கூரையின் மீது விழுந்ததில் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் காயமடைந்த சிறுமி கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி கற்கும் அன்வர் ரப்சானி என்பதுடன் இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையகத்தில் காற்றுடன் கூடிய கடும் மழை..!!
Next post தொலைபேசிக் காதலால் ஏற்பட்ட விபரீதம்…!!