போடியில் பள்ளி மாணவியை கடத்திய பாலிடெக்னிக் மாணவர் கைது…!!
Read Time:1 Minute, 19 Second
போடி திருமலாபுரம் குப்ப ழகிரி தோட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் திருமலாபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6–ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை.
இதையடுத்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் பிரபாகரன் (வயது17) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
பள்ளி மாணவியுடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மாணவர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத் தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரனை திருச்சி சிறுவர் சிறையில் அடைத்தனர்.
Average Rating