காதலை கைவிட மறுத்ததால் மகள் வாயில் வி‌ஷத்தை ஊற்றிய தந்தை…!!

Read Time:2 Minute, 3 Second

201607111133494013_refused-to-abandon-love-Daughter-mouth-Father-began-pouring_SECVPFஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் அகுலேடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மரெட்டி, இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். அவளும் ஒரு மாணவரும் காதலித்து வந்தனர். இதை அறிந்த நரசிம்ம ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகளிடம் காதலை கைவிடுமாறு கூறினார். ஆனால் கல்லூரி மாணவி காதலை கைவிட மறுத்து விட்டார்.

இதனால் மகள் மீது நரசிம்மரெட்டி கடும் ஆத்தி ரத்தில் இருந்தார். இந்த நிலையில் நரசிம்ம ரெட்டி கல்லூரி விடுதிக்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அப்போது அங்குள்ள காலி மைதானத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். திடீரென்று பூச்சி மருந்தை எடுத்து மகள் வாயில் வலுகட்டாயமாக ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி மயங்கி விழுந்தது போல் நடித்தார். மகள் இறந்து விட்டதாக நினைத்து நரசிம்மரெட்டி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு மாணவி எழுந்து கிராம மக்களிடம் உதவி கேட்டார். அவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மரெட்டியை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3டி பிரிண்டிங் முறையில் செயற்கை காது, மூக்கு தயாரிப்பு…!!
Next post வாய்வு தொல்லையால் நம்மை அவஸ்தைப்பட வைக்கும் உணவுகள்…!!