13 வருடங்களுக்கு பின் கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இலங்கை வருகை..!!

Read Time:1 Minute, 27 Second

index-131கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீபன் டியோன் இந்த மாத இறுதியில், இலங்கைவரவுள்ளார்.

இது கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்கு பின்னர் வருகை தரும் முதல் சந்தர்ப்பமாக அமைகிறது.

இலங்கை வரும் கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர், மூன்று நாட்கள் இலங்கையில்தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவர் அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்த வியத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அவர், முதலமைச்சர் விக்னேஷ்வரன், வட மாகாண ஆளுனர் மற்றும் குடியியல் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இந்த விஜயம், வடக்கின் பால் உற்பத்தி மற்றும்விவசாய கைத்தொழிலுக்கு உதவுதல் மற்றும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் இடம்பெறுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலை நிர்ணயிக்கப்பட்ட 16 பண்டங்களில் 10ன் விலையை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும்..!!
Next post இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கத்தில் அடையாள அட்டைகள்..!!