மருமகள்களின் குடுமிப்பிடி சண்டையை விலக்க முயன்ற மாமனார் அடித்துக் கொலை…!!

Read Time:1 Minute, 19 Second

201607151536228291_Woman-lynches-father-in-law_SECVPFபீகார் மாநிலம், தார்பங்கா மாவட்டத்தில் உள்ள இலாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் நாதுனி மண்டல்(50). தனது மகன்கள் மற்றும் மருமகள்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

இன்று காலை நாதுனி மண்டலின் இரு மருமகள்களுக்கும் இடையில் தகராறு நடந்தது. தகராறு கைகலப்பாக மாறி, குடுமிப்பிடி சண்டையாக விஸ்வரூபம் எடுத்தது. அப்போது, வீட்டில் இருந்த நாதுனி மண்டல், இரு மருமகள்களையும் சமரசம் செய்து, சண்டையை விலக்கிவைக்க முயன்றார்.

அப்போது, ஆத்திரமடைந்த ஒரு மருமகள் நாதுனி மண்டலை ஒரு கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, நாதுனி மண்டலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருணா தேவி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கத்தில் அடையாள அட்டைகள்..!!
Next post வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்…!! வீடியோ