இலஞ்சம் பெற முயற்சி செய்த அதிபர் கைது…!!
Read Time:52 Second
பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்தப் பாடசாலையில் நடனம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றுவதற்காக அவரிடம் இருந்து ரூபா 2750 பணத்தை இலஞ்சமாக பெற முயற்சி செய்தமை தொடர்பிலே இவரை கைது செய்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு உதவி செய்து வந்த பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating