சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு…!!
Read Time:1 Minute, 2 Second
நாவலப்பிட்டிய, கெட்டப்புலா தோட்டத்தில் பயன்படுத்தப்படாத தேயிலை மடுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.40க்கு இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ராமலிங்கம் பவித்ரா என்ற 5 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.
சிறுமியின் பிரேரத பரிசோதனைகள் இன்று இடம்பெறுவதாகவும் நாவலப்பிட்டி வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Average Rating