சம்பள உயர்விற்காக போராட்டம்…!!

Read Time:2 Minute, 2 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காத சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக் கொடுக்க கோரி போராட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொட்டகலை சர்வோதய அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளடங்களாக ஜே.வி.பியின் ஆசிரியர் அமைப்பு தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் ஆகியோரினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பள உயர்வு இன்றி வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மந்த போஷனத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தொழில், கல்வி, வியாபார நடவடிக்கைகள் என அனைத்து விடயங்களிலும் சம்பள உயர்வு இன்மை காரணமாக தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் வலியுருத்தப்பட்டது.

போராட்டத்தின் போது ஆலய வழிபாடு மற்றும் சம்பள உயர்வை வழியுறுத்திய வீதி நாடகம் போன்றவை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

அதேவேளை கொட்டகலை வர்த்தக நிலையங்கள் ஒரு மணி நேரம் அடைக்கப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பொலிஸாரும் இப்போராட்டத்திற்கான பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோயிலுக்குச் சென்ற இளைஞன் பலி…!!
Next post 76 வயது மனைவியை தடியால் அடித்துக் கொன்ற 82 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை…!!