வடகொரியா விமானத்தில் திடீர் தீ: சீனாவில் அவசரமாக தரையிறக்கம்…!!
Read Time:47 Second
வடகொரியா அரசுக்கு சொந்தமான ஏர் கொரியோ நிறுவனத்துக்கு சொந்தமான ’Tu-204’ ரக விமானம் இன்றுகாலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் பியாங்யாங் நகரில் இருந்து சீன தலைநகரான பீஜிங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.
சீன நாட்டின் வான் எல்லையில் பறந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீபற்றியதால், வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்யாங் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating